நாளும் ஒரு புத்தகம்
பாம்பன் கிளை நூலகம் 
நாவல்

நாவல்
- அருணா கதிர் . நட்சத்திரமாய் ஒரு மின்மினி
- அவன் வந்ததையும் என் எதிர் மேஜையில் அமர்ந்த தையும் கவனித்த சுசீக்கா அவரது இருக்கையில் இருந்து என் அருகில் வந்தார் அவர் அருகில் வருவதைக் கண்டு இருவருமே இருக்கையிலிருந்து எழுந்து நின்றோம் நாங்கள் மூவரும் நின்று இருந்ததைப் பார்த்தால் பார்த்தாள அவர் நீதிபதி போலவும் நாங்கள் இருவரும் குற்றம் புரிந்த கைதிகள் போலவும் இருந்தது இது லைப்ரரி . பார்க் இல்லை . புக் படிக்கிறதுன்னா மட்டும் இங்க வாங்க . மத்த வேலை எல்லாம் வெளியே வச்சுக்கோங்க . . . " என்றார் கறாராக . எனக்குக் கண்கள் உப்புக் கரிக்க ஆரம்பித்திருந்தன . " ஷ் . . . எதுக்கு அழற இப்போ . . . ? யாரவது பார்த்தா என்ன நினைப்பாங்க . கண்ணைத் தொட முதல்ல . . . . . என்று என்னை அதட்டினார் . இதற்குள் பரத் கொஞ்சம் போல தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினான் . " அக்கா . . . ஒரு ரெண்டே நிமிஷம் நான் பேசிட்டுப் போயிடறேன் . ப்ளீஸ் . . . வேணுமின்னா , நீங்க இங்கேயே இருங்க . உங்க முன்னால பேசுறதில எனக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை . ப்ளீஸ் . . . " என்று கெஞ்சும் குரலில் கேட்டவனிடம் பதிலொன்றும் சொல்லாமல் , சிறிது தூரம் நகர்ந்து , ஆனால் எங்களைப் பார்க்கும்படிக்கே அமர்ந்து கொண்டார் . பரத் என் பக்கம் திரும்பி மெல்லிய குரலில் பேசினான் . " க்ரீட்டிங் கார்ட் பார்த்தியா . . . . ? " என்று ஆவலுடன் முகத்தைப் பார்த்த வண்ணம் வினவினான் . நான் தலையே மட்டும் ஆமாம் என்று அசைத்தேன் . அடுத்து
Super
ReplyDelete