Posts

Showing posts from November, 2019

நாளும் ஒரு புத்தகம் பாம்பன் கிளை நூலகம்

Image
                                                                    நீங்களும் நெம்பர் ஒன் ' ஆகலாம்                     3 . வித்தியாசமானவராய் இருங்கள் '          நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் ? ' என்று யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள் . ' நான் பில்கேட்ஸ் மாதிரி ஆகணும் ' , ' ரஜினிகாந்தைப் போல் நடிகராகணும் ' , ' ஐஸ்வர்யா ராய் போல் பிரபல மாகணும் ' இப்படி பதில் வருமே தவிர ' நான் நானாக இருக்க விரும்புகிறேன் ' என்று பதிலளிப்பவர்கள் அரிது . வாழ்க்கையில் முன்னேற முன் மாதிரிகள் அவசியம் தான் . அவை உந்துதலை அளிப்பவை என்ற அளவோடு நின்றுவிட வேண்டும் . மேற்கொண்டு வெற்றிபெற சுய திறமைதான் உதவும் . இன்னொருவருடைய வாழ்க்கையை நாம் வாழ முடியாது . நமக்கென்று சுய அடையாளம் இருக்க வேண்டும் . அதைப் பெறுவதற்கு நம்மிடம் உள்ள சிறப்பம்சம் ( பிரத்யே...

உலக கருணை தினம்

Image
பாம்பன் கிளை நூலகம்   இன்று உலக கருணை தினம் இன்று உலக கருணை தினம் நவம்பர் 13-ம் தேதியன்று கருணை நாளாக பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. லூயிஸ் பர்பிட் டன்ஸ் மற்றும் டேவிட் ஜாமிலி என்ற இரண்டு மனித நேய உறுப்பினர்கள் கருணை இயக்கத்தை ஆரம்பித்தனர். அவர்களுடைய நோக்கம் நாடு முழுவதும் நல்ல செயல்களை முன்னிலைப்படுத்துவதே ஆகும். வயதான நபர் சாலையை கடக்க உதவி செய்தல், குழந்தைகள் ஒரு நபரின் வாழ்க்கையில் இரக்கம் முக்கிய பங்காகும். இந்த உலக கருணை தினம் நம் உடலுக்கும் மனதுக்கும் நல்லதே செய்கிறது. நாம் அன்புடன் ஒருவரை அணுக அதே அன்பு நம்க்கும் திரும்பக் கிடைக்கிறது. இதனால் நம் மனம் மகிழ்ச்சியடைகிறது. உலக மஹான்கள் பலரும் மதங்கள் வித்தியாசமாக இருந்தாலும் அன்பையும் கருணையும் முக்கியமாகக் கருதி போதித்தார்கள் .எனவே நாம் சில மனிதாபிமான வேலை செய்ய வேண்டும் என்றும் நாம் வெளிப்படையாக அல்லது மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தோடு இருக்க உறுதியேற்க வேண்டும். இன்று ஒரு நாள் மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் கருணை மற்றும் தன்னலமற்ற செயல்கள் சிந்திக்க வேண்டும்....

உலக நிமோனியா தினம்

Image
உலக நிமோனியா தினம் உலகிற்கு ஒன்றிணைந்து நிமோனியாவுக்கு எதிரான போராட்டத்தில் நடவடிக்கை கோருவதற்கான வருடாந்திர மாற்றத்தை வழங்குகிறது.  குழந்தைகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 100 க்கும் மேற்பட்ட அமைப்புகள், குழந்தை நிமோனியாவுக்கு எதிரான உலகளாவிய கூட்டணியாக நவம்பர் 2, 2009 அன்று முதல் உலக நிமோனியா தினத்தை நடத்தின.

நாளும் ஒரு புத்தகம் பாம்பன் கிளை நூலகம்

Image
  கார்ல் மார்க்ஸ்           17 . மூலதனத்தின் முதல்பாகம் வெளிவருதலும் மார்க்ஸியம் நிலை பெறுதலும்        மார்க்ஸ் லண்டன் வந்த பிறகுதான் வாழ்க்கையில் அதிக அளவு துன்பமுற்றார் ; ஆம் , கஷ்டம் என்றால் கஷ்டம் , அவ்வளவு பெரிய கஷ்டத்தை அவர் அதற்கு முன்னர் அடைந்ததேயில்லை ; ஆனால் , புயலுக்குப் பின்னர் அமைதி யென்பார்களே , அந்த அமைதியையும் லண்டனில்தான் மார்க்ஸ் பெற்றார் என்று கூறலாம் . லண்டன் வாழ்க்கையின் போதுதான் இவருடைய " மூலதனம் " என்ற நூலின் முதல் பாகம் வெளியானது . மூலதனத்திற்கு மூலாதாரங்களைத் தேடிக் கொண்டிருந்த போது - அதாவது பல நூல்களைப் பயின்று குறிப்பெடுத்துக் கொண்டிருந்தபோது மார்க்ஸ் பல துன்பங்களை பட்டு விட்டார் . இல்லாமை மட்டுமன்றி , பசி , பட்டினி , நல்ல உடைகள் இல்லாமை போன்றவைகளிலும் மனைவியின் நோயாலும் , பிள்ளைகளின் உடல் நலக் குறைவாலும் சிரமம் என்றால் அப்படி ஒரு சிரமத்தைப் பட்டார் . அந்த நிலையிலும் தாம் மேற்கொண்ட முயற்சியைக் கைவிடவில்லை . இவர்பட்ட துன்பங்களையும் , அந்த நேரத்திலும் இவர் தன் முயற்சிகளில் குன்றாது உழைத்ததையும் எண்ணும்...

நாளும் ஒரு புத்தகம் பாம்பன் கிளை நூலகம்

Image
  இலக்கிய பகுதி ( பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் .                  சங்க நூல்களுக்குப் பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு -  பதினெண் கீழ்க்கணக்கு , பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பாடியோர் 13 பேர் - இதனை நீதி நூல்கள் என அழைப்பர் . - இதில் பெரும்பாலானவை அற நூல்கள் .  அறநூல்கள் (நீதி நூல்கள்) - 11 அகம் - 6 புறம் - 1 ( களவழி நாற்பது) நாலடியார், நான்மணிக்கடிகை , இன்னா நாற்பது , இனியவை நாற்பது , திரிகடுகம் , ஏலாதி , முதுமொழிக்காஞ்சி , திருக்குறள் , ஆசாரக்கோவை , பழமொழி , சிறுபஞ்சமூலம் ஆகியவை அற நூல்கள் . - ஐந்திணை 50 , ஐந்திணை 70 , திணைமொழி 50 , திணைமொழி 150 , கைந்நிலை , கார் நாற்பது ஆகிய 6 - உம் அக நூல்கள் . களவழி நாற்பது அகம் - புறம் . 1 . நாலடியார் 2 . நான்மணிக்கடிகை 3 . இன்னா நாற்பது 4 . இனியவை நாற்பது 5 . கார் நாற்பது 6 . களவழி நாற்பது 7 . ஐந்திணை ஐம்பது 8 . திணைமொழி ஐம்பது 9 . ஐந்திணை 70 10.திணைமாலை150 11 . திருக்குறள் 12.திரிகடுகம் 13 . ஆசாரக்கோவை 14.பழமொழி 15 . சிறுபஞ்சமூலம் 16 . முதுமொழிக்காஞ்சி17.ஏலாதி 18 . கைந்நிலை .

நாளும் ஒரு புத்தகம் பாம்பன் கிளை நூலகம்

Image
மகா சிரசு முத்திரை ' சிரசு ' என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில் ' தலை ' என்று பொருள் . நமது தலைப் பகுதியில் ஏற்படும் அழுத்தங் கள் , சக்தித் தடைகள் , வலிகள் , சைனஸ்களில் ஏற்படும் நீர் கோர்ப்பு ஆகிய அனைத் தையும் இந்த முத்திரை போக்கி விடுவதால் இதை மகா சிரசு முத்திரை என்றழைக்கிறார்கள் . செய்முறை . பெருவிரல் , சுட்டுவிரல் , நடுவிரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிப்பகுதிகளும்ஒன்றோடு ஒன்று தொட்டுக் கொண்டிருக்கும்படி இணையுங்கள் அதிக அழுத்தம்  தேவை யில்லை தொட்டுக்  கொண்டிருந்தால் போதும் அடுத்து  மோதிர விரலை மடித்து , உள்ளங்கையிலுள்ள பள்ளத்தில் படுமாறு வைக்கவும் . சுண்டு விரல் மட்டும் வளைவின்றி நேராக இருக்கட்டும்.சுவாசம்  ஆழமாகவும் சீராகவும்  இருப்பது அவசியம் .உங்களது முழு கவனத்தையும் செய்யும் முத்திரையின்மீது பதியுங்கள். அமரும் முறை  யோகாசனங்களில் பரிச்சயமுள்ளவர்கள் பத்மாசனத்தில்அமர்ந்து செய்யலாம். பரிச்சயமில்லாதவர்கள் கால்களை மடக்கி சம்மணமிட்ட நிலையில் அமர்ந்து செய்யலாம் . தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்தும் செய்யலாம் . கால்களின் பாதங்கள் தரையைத் தொ...

நாளும் ஒரு புத்தகம்

Image
பாம்பன் கிளை நூலகம்  நாவல் அருணா கதிர்  . நட்சத்திரமாய் ஒரு மின்மினி அவன் வந்ததையும்  என் எதிர் மேஜையில் அமர்ந்த தையும் கவனித்த சுசீக்கா அவரது இருக்கையில்  இருந்து என் அருகில் வந்தார் அவர் அருகில் வருவதைக் கண்டு இருவருமே இருக்கையிலிருந்து எழுந்து நின்றோம் நாங்கள் மூவரும்  நின்று இருந்ததைப் பார்த்தால் பார்த்தாள அவர் நீதிபதி போலவும் நாங்கள் இருவரும் குற்றம் புரிந்த கைதிகள் போலவும் இருந்தது இது லைப்ரரி . பார்க் இல்லை . புக் படிக்கிறதுன்னா மட்டும் இங்க வாங்க . மத்த வேலை எல்லாம் வெளியே வச்சுக்கோங்க . . . " என்றார் கறாராக . எனக்குக் கண்கள் உப்புக் கரிக்க ஆரம்பித்திருந்தன . " ஷ் . . . எதுக்கு அழற இப்போ . . . ? யாரவது பார்த்தா என்ன நினைப்பாங்க . கண்ணைத் தொட முதல்ல . . . . . என்று என்னை அதட்டினார் . இதற்குள் பரத் கொஞ்சம் போல தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினான் . " அக்கா . . . ஒரு ரெண்டே நிமிஷம் நான் பேசிட்டுப் போயிடறேன் . ப்ளீஸ் . . . வேணுமின்னா , நீங்க இங்கேயே இருங்க . உங்க முன்னால பேசுறதில எனக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை . ப்ளீஸ் . . . " என்று கெஞ்சும் குரலில் ...

நாளும் ஒரு புத்தகம்

Image
 பாம்பன் கிளை நூலகம் நவீன வேளாண்மை உயிர் வேலியாகவும் பயன்படும் ! நோய்த் தீர்க்கும் மூலிகையாகவும் பயன்படும் விவசாயிகளுக்கு கைமேல் பலன்கொடுக்கும் கல்யாண முருங்கை அழகுச் செடியாகவும் , காய்கறி செடிகள் , மலர் வகைகள் என பலவகைச் செடிகள் நிறைந்து கிடக்கின்றன , கடலூர் மாவட்டம் , சேத்தியாதோப்பு தென்றல் நர்சரியில் . இருந்தபோதும் நர்சரியின் உரிமையாளர் திரு . கொளஞ்சியப்பன் விவசாயிகளிடையே மரவளர்ப்பை அதிகம் ஊக்குவிப்பார் . அதோடு பொது இடங்களை மரங்களால் அழகாக்கி , சுற்றுப் புறத்தை சுகாதாரமாக வைப்போம் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் . இந்நிலையில் தற்போது விவசாய நிலங்களுக்கு இயற்கை வேலி அமைப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் . இதற்காக தனது நர்சரியில் கலாக்காய் ,அட்சய பாத்திரமாக விளங்குகிறது . கல்யாண முருங்கையின் இலை , பூ , தண்டு என அனைத்து பகுதிகளும் மருத்துவ குணம் நிறைந்தவை . கல்யாண முருங்கை பொதுவாக வயிற்றுப் புழுக்களை கொல்லும் பண்புடையது . இதன் இலை சிறுநீரை பெருக்கும் . மலத்தை இளக்கும் . தாய்ப்பாலை பெருக்கி குழந்தைகளுக்கு ஆரோக்கியம் காக்கும் . இதன் பூக்கள் கருப்பைய...

நாளும் ஒரு புத்தகம் வாசிக்கக் கையில் எடுத்துவிட்டால் கீழே வைக்க முடியாது

Image
பாம்பன் கிளை நூலகம் பொன் விலங்கு     தன்னிடம் கேட்டுவிட்டுத் தமிழ் இலக்கியத்தைப் பற்றியோ தமிழைப் பற்றியோ தன்னிடம் அவள் ஒன்றும் கேட்காமல் விட்டிருந்தால் தான் அவன் மிகவும் ஏமாறியிருப்பான் குறுந்தொகை என்னும் சங்கத்தொகை நூலிருந்து அழகிய பாடல் ஒன்றைக் கூறி அதன் பொருளை விளக்கி விவரித்தான் சத்தியமூர்த்தி , "      யாயும் ஞாயும் யார் ஆகியரோ  எந்தையும் நுந்தையும்      எம்முறைக் கேளிர் ?                        யானும் நீயும்எவ்வழி அறிதும்?  செம்புலப் பெயல்நீர் போல        அன்புடை நெஞ்சம்           தாம் கலந்தனவே "      முன்பின் பழக்கமில்லாத அழகிய இளைஞன் ஒருவனும் எழிலரசியாகிய பெண்ணொருத்தியும் ஒருமலைச் சாரலில் சந்தித்து மனம் ஒன்றுபடுகிறார்கள் . அவன் அப்படியே தனக்கு முன்னால் தன்னுடனே தான் காணும்படி எப்போதும் நின்றுகொண்டே இருக்க வேண்டும் போல் அவளுக்கு ஆசையாக இருக்கிறது . ஆனால் அவனோ இதோ இன்னும் சிறிது நேரத்தில் நான் பி...

நாளும் ஒரு புத்தகம்

Image
            பாம்பன் கிளை நூலகம் தேசத்தின் சொத்து ஜீவா                திரைப்பட இயக்குநர் சீனிவாசன் மாணவராக இருந்த போது , கும்பகோணம் கல்லூரியில் அவர் ஏற்பாடு செய்த ஜீவா பேசிய கூட்டத்தில் , மாற்றுக் கட்சி மாணவர்கள் குழப்பம் ஏற்படுத்தினார் . களாம் . சீனிவாசனும் அவர்களுடைய சிநேகிதர்களும் இதற்குப் பழிக்குப் பழி வாங்கப் பேராசிரியர் அன்பழகன் கூட்டத்தில் திட்டமிட்டார்களாம் . அப்போது சீனிவாசனை ஜீவா அவர்கள் கூப்பிட்டுக் கூறிய அறிவுரை என்ன தெரியுமா ? " சீனிவாசா நீ சின்னப் பையன் . அரசியலில் அடிபட்ட வனும் அவமானப்பட்டவனும் பழிக்குப் பழிவாங்காமல் அமைதியாக இருந்து விடுவானேயானால் , அதுவே அவனைப் பிரபலப்படுத்திவிடும் . அடித்தவனுக்குத்தான் அவப்பெயர் ஏற்படும் . ஆத்திரப்படாமல் , பழிக்குப் பழி என்பதைக் கைவிடு , அதன் பலனை நீயே பார்ப்பாய் " என்றாராம் . ஜீவா நினைத்திருந்தால் , சீனிவாசனைப் போன்ற சிறுத்தை களைச் சுலபமாகச் சீண்டிவிட்டுக் கல்லூரியில் ஒரு கலவரத்தை ஏற்படுத்தியிருக்க முடியும் . மோதல்களினால் உண்டாகும் காயங்களுக்கு ஆயிரம் நியாயங்க...

நாளும் ஒரு புத்தகம்

Image
                                              பாம்பன் கிளை நூலகம்.      மின் அணுவியல் 1886 - இல் ஹெர்ட்ஸ் மின் காந்த அலைகளை உற்பத்தி செய்தார் . அவர் மாக்ஸ்வெல்லின் மின் காந்தவியல் கொள்கை யின் அடிப்படையில் அவற்றைக் கண்டறிந்திருந்தார் . ஹெர்ட்ஸை பின் தொடர்ந்து இங்கிலாந்தின் ஆலீவர் லாட்ஜ் , ரஷ்யாவின் போபோவ் மற்றும் இந்தியாவின் ஜகதீஷ் சந்திர போஸ் ஆகியோர் உட்பட பலர் மின் காந்த அலைகளை பல்வேறு திசைகளில் ஆராய முயன்றனர் . எனினும் வெகுஜன பயன்பாடு எதற்கும் அதை உட்படுத்தும் முயற்சிகள் தோல்வி யையே தழுவின . ஒரு முறை வானில் ஏவப்பட்ட மின்காந்த அலைகளைத் திரும்பப்பெற முடியாதென்றே இயற்பியல் வல்லுனர்கள் கருதினர் . எனவே முயற்சிகளைக் கைவிடவும் எண்ணினர் . அட்லாண்டிக் பெருங்கடல் வழியே மின்காந்த அலை களை வானில் செலுத்தி அவற்றை வேறொரு இடத்திலிருந்து சற்றும் பிழையின்றி தெளிவாகத் திரும்பப் பெற்று உலகை அசத்தியவர் மார்கோனி . 1905 வாக்கில் ஒரு முழுமையான வானொலியை வடிவமைப்பதில் மார் கோனி...