கார்ல் மார்க்ஸ் 17 . மூலதனத்தின் முதல்பாகம் வெளிவருதலும் மார்க்ஸியம் நிலை பெறுதலும் மார்க்ஸ் லண்டன் வந்த பிறகுதான் வாழ்க்கையில் அதிக அளவு துன்பமுற்றார் ; ஆம் , கஷ்டம் என்றால் கஷ்டம் , அவ்வளவு பெரிய கஷ்டத்தை அவர் அதற்கு முன்னர் அடைந்ததேயில்லை ; ஆனால் , புயலுக்குப் பின்னர் அமைதி யென்பார்களே , அந்த அமைதியையும் லண்டனில்தான் மார்க்ஸ் பெற்றார் என்று கூறலாம் . லண்டன் வாழ்க்கையின் போதுதான் இவருடைய " மூலதனம் " என்ற நூலின் முதல் பாகம் வெளியானது . மூலதனத்திற்கு மூலாதாரங்களைத் தேடிக் கொண்டிருந்த போது - அதாவது பல நூல்களைப் பயின்று குறிப்பெடுத்துக் கொண்டிருந்தபோது மார்க்ஸ் பல துன்பங்களை பட்டு விட்டார் . இல்லாமை மட்டுமன்றி , பசி , பட்டினி , நல்ல உடைகள் இல்லாமை போன்றவைகளிலும் மனைவியின் நோயாலும் , பிள்ளைகளின் உடல் நலக் குறைவாலும் சிரமம் என்றால் அப்படி ஒரு சிரமத்தைப் பட்டார் . அந்த நிலையிலும் தாம் மேற்கொண்ட முயற்சியைக் கைவிடவில்லை . இவர்பட்ட துன்பங்களையும் , அந்த நேரத்திலும் இவர் தன் முயற்சிகளில் குன்றாது உழைத்ததையும் எண்ணும்...