நாளும் ஒரு புத்தகம்
பாம்பன் கிளை நூலகம் இலை போயாச்சு ! சென்னை ஓட்டல் ஒன்றில் மதிய உணவு சாப்பிட உட்கார்ந்தேன் . இலை ! போட்டார்கள் . தொட்டுப்பார்த்தேன் . வாழை இலை வடிவத்தில் கத்தரித்த பிளாஸ்டிக் வாழை இலை . நான் எழுந்துகொண்டேன் . " சார் , என்ன ஆச்சு ? என்றார் இலை போட்டவர் , " நிஜமான வாழை இலையில்தான் சாப்பிடுவது ! வழக்கம் ” சொல்லிக்கொண்டே வெளியேறினேன் . “ சாருக்கு நிஜமான வாழை இலை வேணுமாம் " என்ற கேலியும் மற்றவர்கள் சிரிப்பதும் கேட்டது . நாள்தோறும் வீடுகளில் வாழை இலையில் சாப்பிட்ட காலம் ஒன்று இருந்தது . தென்னை தெருவில் " வாழை இலை . வாழை இலை . . . . " என்று கூவி விற்பார்கள் . வாழை !இலை சாப்பாட்டுக்குத் தனிருசி உண்டு . சூடாகப்பரிமாறிய சாதத்தின் சுவையை | வாழை மர இலையின் வாசனை கூட்டிவிடும் . எளிய உணவைக் கூட வாழை ! இலையில் பரிமாறினால் . மனதில் மகிழ்ச்சி உண்டாகும் . தஞ்சாவூர் அருகில் உள்ள குக்கிராமத்தில் வசித்த நண்பரைப்பார்க்க இரண்டு மூன்று பேர் முன்னறிவிப்பு இல்லாமல் போய்விட் டோம் . ! மினுமினுக் மழை பெய்துகொண்டிருந்தது . அந்த வேளையிலும்...