நாளும் ஒரு புத்தகம் பாம்பன் கிளை நூலகம்

சேரர்கள் வரலாறு     கருவூர் ஏறியஒள்வாள்கோப்பெருஞ்சேரல்இரும்பொறை          ( கி . மு . 300 - 275 ) இந்திய தீபகற்பத்தின் தென்மேற்குமூலையில் , அரபிக் கடலுக்கும் மேற்குமலைத் தொடருக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி சங்க காலத்தில் சேரநாடு எனப்பட்டது . இந்நாட்டை ஆண்டவர்கள் சேரமான் ( சேரர்மகன் ) என்று அழைக்கப்பட்டார்கள் . சேரமான் நாடு அசோகர் கல்வெட்டில் கேரள புத்ர நாடு எனக் குறிப்பிடப்படுகிறது . இன்று அது கேரள மாநிலமாகத் திகழ்கிறது . சேரநாடு சிறப்புற்று விளங்கிய காலத்தில் அதன் வடக்கு எல்லை துளு நாட்டில் ஏழில் மலை வரை பரவி யிருந்தது . கிழக்கு எல்லையை கொங்கு நாடு என்று கொள்ளலாம் . தெற்கிலும் , மேற்கிலும் , கடல் எல்லையாக இருந்தது . ஆன்பொருநை , காஞ்சி வாண என்ற ஆறுகள் சேர நாட்டில் ஓடின . அயிரை மலை , நேரி மலை , ஆனை மலை , கொல்லி மலை என்பன அந்நாட்டின் சிறந்த மலைகள் ஆகும் . ஆன்பொருநை ஆற்றங்கரையில் அமைந்த வஞ்சி சேர நாட்டின் தலைநகரமாகும் . பிற்காலத்தில் வஞ்சி கருவூர் என்று அழைக்கப்பட்டது .

Comments

Popular posts from this blog

போட்டித் தேர்வு புத்தகங்கள் பாம்பன் கிளை நூலகம்

நாளும் ஒரு புத்தகம்